ஆடி மாத ராசி பலன்கள் - கன்னி

காசு பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் நீங்கள் கடந்த காலத்தை விட வருங்காலத்தைப்பற்றி அதிகம் யோசிப்பீர்கள். கலகலப்பா கவும் கவித்துவமாகவும் பேசும் நீங்கள், அவ்வப்போது ஆகாயக் கோட்டை
கட்டுவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் சாதகமான வீடுகளில் செல்வ தால் உங்களுடைய தனித்திறமை அதிகரிக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கூடிவரும். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமாநிலத்தில் இருப்பவர்களால் சில உதவிகள் கிடைக்கும். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். ஷேர் மூலமாக பணம் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். ராசிக்கு 10ல் குரு நிற்பதால் உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார் கள். உங்கள் புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசுவதை தவிர்க்கப் பாருங்கள். இனம்புரி யாத ஒரு பயம் அடிமனதில் இருந்து கொண்டே இருக்கும். ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ என்ற ஒரு அச்சம் வந்து நீங்கும். 10ம் வீட்டிலேயே செவ்வாய் இருப்பதால் வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட் வகைகளால் பணம் வரும். பாதச்சனி நடைபெறுவதால் காலில் அடிபடும். தூக்கம் குறையும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விடாதீர்கள். யாருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். அரசியல்வாதிகளே! பதவியை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும். மாணவர்களே! வகுப்பாசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். ஓவியம், இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வரும் மாதவிடாய்க் கோளாறு குறையும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. பிரச்னை தந்த பங்குதாரரை நீக்குவீர்கள். புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். உணவு, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோக ஸ்தானமான 10ம் வீட்டில் குருவும் செவ்வாயும் நிற்பதால் வேலைச்சுமை இருக்கும். அதிகாரிகளிடம் கவனமாகப் பழகுங்கள். வீண்பழி வரக்கூடும். கலைத்துறையினரே! பிறமொழிப் பாடங்களால் புகழடைவீர்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். நிலத்தகராறுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். தொந்தரவு தந்த பம்பு செட் டை மாற்றுவீர்கள். கடின உழைப்பால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 19, 20, 21, 25, 27, 28, ஆகஸ்ட் 3, 4, 6, 9, 13, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 29, 30 மற்றும் 31ந் தேதி மதியம் 1:30 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்: சீர்காழிக்கு அருகேயுள்ள அண்ணங்கோயில் ஸ்ரீநிவாசப் பெரு மாளை தரிசித்துவிட்டு வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment