ஆடி மாத ராசி பலன்கள் - துலாம்

தோல்வியால் துவண்டு வருபவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசுபவர்களே! 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய
கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கான வழி கிடைக்கும். 9ம் வீட்டிலேயே செவ்வாயும் நிற்பதால் தந்தையாருக்கு முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. உங்களின் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சிலர் வேலையில் இருந்து கொண்டே மீதி நேரத்தில் வியாபாரம் தொடங்குவதற்கான வாய்ப்பு கிட்டும். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 11ந் தேதி வரை லாப வீட்டிலேயே நிற்பதால் சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களைப் பற்றிய புகழ், கௌரவம் ஒருபடி உயரும். சூரியன் 10ல் நிற்பதால் மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஜென்மச் சனி நடைபெறுவதாலும் ராசியிலேயே ராகுவும் தொடர்வதாலும் இரவு நேரத்தில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 7ல் கேது தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் வாக்குவாதங்கள் வரும். கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிந்து செல்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளே! தலைமை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புதுப் பொறுப்புகளை ஏற்க வேண்டியது வரும். மாணவர்களே! வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெறுவீர்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது மறதி ஏற்படும். விடைகளை எழுதிப் பாருங்கள். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். உயர்கல்வியிலும் முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும். பங்குதாரர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. பதவி உயர்விற்காக நீதிமன்றம் சென்றீர்களே! நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். என்றாலும் 10ம் வீட்டில் சூரியன் நிற்பதால் வேலைச்சுமை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லைகள் குறையும். ஏழரைச் சனி நடைபெறுவதால் பக்கத்து நிலத்தாருடன் வாய்ச் சண்டை, வரப்புச் சண்டையெல்லாம் வேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 19, 20, 21, 22, 27, 28, 30, ஆகஸ்ட் 6, 8, 9, 10, 11, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 31ந் தேதி மதியம் 1:30 மணி முதல் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் உடல் நலத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: திருச்செந்தூருக்கு அருகேயுள்ள கற்குவேல் ஐயனாரை தரிசித்து விட்டு வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment