ஆடி மாத ராசி பலன்கள் - மிதுனம்

கொள்கை கோட்பாட்டுடன் வாழும் நீங்கள் மனதில் நினைப்பதை முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். உங்கள் ராசிநாதனான புதனும் யோகாதிபதி யான சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஓரளவு பணவரவு உண்டு. தடைகளெல்லாம் நீங்கும். பழைய நண் பர்கள் வலிய வந்து பேசுவார்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கேதுபகவான் லாப வீட்டில் நிற்பதால் வேற்று மாநி லத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குருவும் செவ்வாயும் உங்கள் ராசிக்குள் ளேயே நிற்பதால் ஆரோக்யம் பாதிக்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அசைவ உணவு களை தவிர்ப்பது நல்லது. உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். 5ல் சனியும் ராகுவும் நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். 2ல் சூரியன் நிற்பதால் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். காரசாரமாகப் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் சிக்காதீர்கள். தலைமைக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் தரப்பு செயல்பாடுகளை நியாயப்படுத்த தக்க ஆதாரங்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களே! சுறுசுறுப்பு கூடும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விளை யாட்டிலும் ஆர்வம் உண்டாகும். கன்னிப் பெண்களே! காதல் குழப்பங்கள் தீரும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வியாபாரத்தில் ஓர ளவு லாபம் வரும். சந்தை நிலவரத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப புது முதலீடு செய்வீர்கள். வேலையாட்களை அதிகம் விரட்ட வேண்டாம். கமி ஷன் வகை களால் லாபம் உண்டு. பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல் லது. சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். அவசரப்பட்டு வேலையை விட்டுவிடாதீர்கள். மூத்த அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் பயன்ப டுத்தி கொள்ளப் பாருங்கள். சம்பளபாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வாருவீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:ஜூலை 19, 20, 21, 27, 28, 29, 30 ஆகஸ்ட் 1, 6, 8, 9, 10, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 22ந் தேதி மாலை 3 மணி முதல் 23 மற்றும் 24ந் தேதி மாலை 6 மணி வரை நாவடக்கத்துடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: கரூருக்கு அருகேயுள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதிக்கு சென்று வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment