சிம்ம ராசி 2013 | சிம்ம ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் சிம்மம்


சிம்மம்:
2013 சிம்ம ராசி
மகம்; பூரம்; உத்திரம்(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.:


இந்த வருடம்  முற்பாதியில் அதாவது 2013  மே மாதம் 26-ம் தேதிவ்ரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10 ம் இடத்திலும் அதன்பிறகு  மே மாதம் 27-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார். ஏற்கெனவே சனி பகவான் உங்கள் ராசிக்கு யோகமான 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராகு பகவானும் அதே யோகமான 3-ம் இடத்திலும் கேது பகவான் சாதகமற்ற 9-ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதம் 30-ம் தேதிவரை  குருபகவான் வக்கிர கதியில் சஞ்சரித்து உங்களுக்கு யோகமான பலன்களைத் தருகிறார். எனவே முதல் ஒரு மாத காலத்துக்கு உங்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் வராது. உங்கள் முயற்சிகள் எதுவானாலும் வெற்றி பெறும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்தி வரும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தமான தொல்லைகள் நீங்கும். வரவேண்டிய பணம் தடையின்றி வரும். நீண்டநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இப்படியாக  ஆண்டின் முதல் மாதத்தில் நற்பலன்கள் நிகழும் . அதன் பின்னால்,  மே மாதம் 26-ம் தேதிவரை கொஞ்சம் படுத்தல்கள் இருக்கும்.

10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு  பகவான் , கொஞ்சம் சோதிக்கத்தான் செய்வார்.  உங்கள் தாயாரின் உடல்நலத்தைப் பாதிப்பார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது  எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக  சென்று செய்யக்கூடிய பணியாக அமையும். குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறையும் ஏற்படும். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகளால் யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வயதானவ்ர்களுக்கு உடல் நல்ம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்த்ல் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவீர்கள். பணத்துக்காக அல்லாடும் சூழ்நிலையை நீங்களே  உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை  எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும்   சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்குத்   தகுந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர் . உடல்நலத்தில் கவனம் தேவை. கடுமையான நோய் பாதிப்புகள் இருக்குமானால்,அவை நீங்கி, அலர்ஜி, தோல் நோய்கள் போனறவை ஏற்படும். -

10-ம் இடத்துக்கு வரும் குருபகவான் உங்கள்  பதவிக்கு சிறுசிறு தொல்லைகளைத் தருவார். புதிதாகத் தொழில் செய்யநினைப்பவர்கள்  கவனத்துடன் செயலாற்றவேண்டும கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்குவழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால் கூட்டாளிகள் விலக நேரும். இருக்கும் வேலை பிடிக்காமல் வேறு வேலை  தேடுவோர் பழைய வேலையில் இருந்துகொண்டு புதியவேலையைத் தேடவேண்டும். இல்லாவிட்டால் கையிலிருக்கும் வேலையும் போய், வேலையின்றித் திண்டாட வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் அணுசரணை இருந்தால் மட்டுமே தொழில்விரிவாக்கத்தைப் பற்றி நினைக்கவேண்டும்.  அந்த முயற்சியைத் தள்ளிப்போடுவதே சாலச் சிறந்தது. தேவையில்லாத இடமாற்றம் வரும். கணவன்-மனைவியிடையே பிரச்சினை தோன்றும். சகோதரர்களிடையேயும் பிளவு ஏறப்டும். மனக் குழப்பங்கள் ஏற்படும்.

இனி கேது பகவான், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம். தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன்மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களைத்   தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட  தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு  என்பதால், மேற்கணட ஹோமங்களை செய்துகொண்டால் ,  தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொளவ்து அவசியம்.  ஆனால், இந்த காலக் கட்டத்தில் பேச்சில் நிதானம் தேவை.

சனி உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகமானது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்திற்கு சனி வருவதால், இந்த சனியை குருபகவான் பார்வையிடுவதன் மூலம்  ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்துவந்த  விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள்  என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  போன்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.  ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் , அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடுமப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள்  இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

மே மாதம் 27-ம் தேதி முதல் நிகழப்போகும் குருவின் 11-ம் இடத்து சஞ்சாரம்  உங்களுக்கு யோகமான பலன்களைத் தரும்.  நவம்பர் மாதம் 6-ம் தேதிவரை இந்த சஞ்சாரம் தொடரும். அதுவரை பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று பிரச்சினைகள் தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை  தடைப்பட்ட திருணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.

ஆண்டின் இறுதியில் 7.11.13 முதல்  ஆண்டு இறுதியான 31.12.13. வரை  குரு வக்கிரமாவதால், மீண்டும் சிரமங்கள் தலைதூக்கும். இத்துடன்   கேதுவின் 9-மிட  சஞ்சாரமும் சரியில்லையென்றாலும், சாதகமாக சஞ்சரிக்கும் சனி மற்றும் ராகுவின் சஞ்சாரத்தால், பாதிப்புகள் நிகழ வாய்ப்பில்லை. மே மாதம் 27-ம் தேதி முதல் 6.11.13 வரை குருவின் சஞ்சாரமும் சாதமாக இருப்பதால், இந்த ஆண்டு  மகிழ்ச்சிகரமாகவே இருக்கும்.

பரிகாரம்:

உங்களுடைய ராசிக்கு கேதுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், கணேச பகவானின் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும்.  குரு பகவான் ஆண்டின்   முற்பகுதியிலும் , கடைசி 2 மாதங்களும் , சரியான சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலை மாலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.

இந்த 2013-ம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டுதான். வாழ்க!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment