Nalla Nanban Venbam Endru


நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைக்கின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா


இறைவனே இறைவனே
இவனுயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துக் கொள்
உனக்கது போதுமா


இவன் எங்கள் ரோஜாச் செடி
அதை மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும் நொடி
அதை வேண்டினோம் மீண்டும் தா


உன் நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா
மனமென்னும் மேல்மாடத்தில்
எங்கள் ஞாபங்கள் பூக்கவில்லையா


இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா
தாய் இவள் அழுகுரல்
கேட்டபின்னும் உறக்கமா


வா நண்பா வா நண்பா
தோள்களில் சாயவா
வாழ்ந்திடும் நாளெல்லாம்
நான் உன்னைத் தாங்க வா




பாடியவர்: ராமகிருஷ்ணன், மூர்த்தி
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா. முத்துக்குமார்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment