Movie name: Idhayam (1991)
Music: Ilaiyaraja
Singer(s): S. P. Balasubrahmanyam
Lyrics: Vairamuthu
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
***
ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
***
தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
0 comments:
Post a Comment