முத்து மணி மாலை பாடல் வரிகள்


Movie name: Chinna Kounder (1991)
Music: Ilaiyaraja
Singer(s): S. P. Balasubrahmanyam, P. Susheela
Lyrics: R. V. Uthaya Kumar


ஆண் : முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

ஆண் : உள்ளத்துல நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

ஆண் : முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

(இசை) சரணம் - 1

பெண் : கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் : மேகந்தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா..

ஆண் : முத்து மணி மாலை

பெண் : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

ஆண் : வெட்கத்துல சேலை

பெண் : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

(இசை) சரணம் - 2

ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே

பெண் : கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

ஆண் : நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நாந்தானே

பெண் : அத்திமரப் பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீ தானே

ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

பெண் : முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

பெண் : உள்ளத்துல நீ தானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆண் : ஒரு நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment